
‘நான் கடவுள்’ படத்தை தயாரித்த கே.எஸ்.சீனிவாசன், தற்போது ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து ‘ஜெயங்கொண்டான்’ கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘வந்தான் வென்றான்’ படத்தை தயாரிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இவர் தனுஷூடன் ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார்.
பி.சி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி மற்றம் கார்க்கி ஆகியோர் எழுதுகின்றனர்.
இந்தப் படத்தின் துவக்க விழா வருகிற 27ம் தேதி காலை ஏவி.எம்.பிள்ளையார் கோவிலில் நடைபெற உள்ளது. அபிராமி ராமநாதன் கிளாப் அடித்து துவங்கி வைக்க, மணிரத்னம் முதல் காட்சியை படமாக்குகிறார். அதன் பிறகு சென்னையிலும், அப்படியே கேரளாவில் உள்ள கண்ணணுர் பகுதியிலும் தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைகிறது. பாடல் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்திற்கு வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர், சண்டைப் பயிற்சி – ராக்கி பிரபு, தயாரிப்பு மேற்பார்வை – சின்னசாமி, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
