Sunday, February 5th, 2012

கொழும்பில் அனைத்துலக இந்தி(ய) திரை விழாவா, 29 ஈழத்திரை நிறுவனங்கள் கண்டனம்

Published on May 28, 2010 by   ·   No Comments

கொழும்பில் ஹிந்தி திரைப்பட விழாவை யூன் 3-5 இடைப்பட்ட வேளையில் நடாத்தி தமிழர்கள் தம் மீதான இன அழிப்பு ஊழிப் போருக்கு ஆளாக்கப்பட்டு ஒரு வருடத்தை நினைவு கூரும் இவ் வேளையில்  ராஜபக்ச அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் மூன்று முக்கிய தமிழகத் திரையுலக அமைப்புகளோடு இருபத்தொன்பது புலம்பெயர் ஈழத்தமிழ் திரை நிறுவனங்கள் கைகோர்த்து ஆதரவு வழங்குகின்றன.

புலம்பெயர் ஈழத்தமிழர் திரையுலக முயற்சியை ஊக்குவித்து தொழில்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத்திரை வேலைத்திட்டத்தினூடாக குறித்த 29 நிறுவனங்களும் தமது கருத்தை செவ்வாயன்று வெளியிட்டுள்ளன.

வி.சி. குகநாதன் தலைமையில் இயங்கும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், ராமநாரயணன் தலைமையில் இயங்கும் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ராதாரவி அவர்களின் நெறிப்படுத்தலில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு புலம்பெயர் தமிழர் நிறுவனங்கள் ஈழத்திரை மூலம் அனுப்பியுள்ள மடலின் உள்ளடக்கம் வருமாறு.

அன்புடன்
ஈழத்திரை

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors