Sunday, February 5th, 2012

ஈழத் தமிழர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘தா’

Published on June 25, 2010 by   ·   No Comments

“பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பளை இல்லை, ஒரு பெண்ணுக்கு பிடிக்கிறவந்தான் ஆம்பிளை” இப்படி ஒரு மையக்கருவை வைத்து உருவாகும் படம் ‘தா’. அது என்ன தா, என்று இயக்குநரிடம் கேட்டால், காதலை தா என்று அர்த்தமாம். வெறும் தா என்று தலைப்பு வைத்தால் ஒரு ஈர்ப்பு இருக்கும் என்பதால் இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தாராம், இப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.சூர்யபிரபாகர்.

இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஸ்ரீவிஜய், இலைங்கை தமிழரான இவர் யாழ்பாணத்தை சேர்ந்தவராம். இவரின் ஆல்பங்களை கேட்ட சூர்யபிரபாகர், இவரைத் தேடிப்பிடித்து இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் ஒவ்வொரு பாடலும் ஸ்ரீவிஜய்க்கு இன்னும் பல படங்களின் வாய்ப்புகளை பெற்றுத்தரும், என்று கூறும் இயக்குநர் இது போல படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் தேர்வில் பெரிதும் மெனக்கெட்டு இருக்கிறார்.

படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி, இவர் நடிக்க வருவதற்கு முன்பு விமான பணியாளராக வேலை பார்த்தாராம். இப்படி சாப்டா வளந்த இவரை, இந்த படத்திற்காக ரொம்பவே மாற்றியிருக்கிறார் இயக்குநர். படத்தின் ஹுரோயின் நிஷா, மும்பையை சார்ந்தவரான இவரையும் கதாபாத்திறத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்காக, படப்பிடிப்பு நடக்கும் கோவையிலே ஒரு மாதம் தங்க வைத்து அந்த ஊர் மக்களின் நடவடிக்கைகளை கவனிக்க வைத்து, அதன் பிறகுதான் படப்பிடிப்பை துவங்கினார்களாம். இது போல ஒவ்வொறு விசயத்திலும் தன்னை சமுதானப்படுத்திக்கொள்ளாமல், திரைக்கதைக்கு எது தேவையோ அதை கேட்ட இயக்குநருக்கு முகம் சுலிக்காமல், செய்து கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ராஜேஷ் உத்தமன்.

‘நாடோ டிகள்’ பட இயக்குநர் சமுத்திரக்கனியிடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சூர்யபிரபாகர் இயக்கும் முதல் படம் இது. எந்த வகையிலாவது இந்த படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம், படத்தின் தலைப்பு, விளம்பர போஸ்ட்டர் என அனைத்திலும் பிரதிபலிக்கிறது. அது படத்திலும் இருந்தால் சரி.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors