கடந்த வியாழக்கிழமை பெங்களூரு மிர்ரர் ஆங்கில நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பி இருப்பதாக நாம் தமிழர் இயக்க வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாகியும் சூரியா இதுவரை தொடர்பு கொள்ளவில்லையாம். இதனால் அவரது மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார் சீமானின் நேரடி உதவியாளர். ஆனால் அவருக்கு கிடைத்த பதில் “ சூரியா அப்படியொரு பேட்டியே கொடுக்க வில்லை. எங்கேயோ தவறு நடந்துள்ளது.
இதை பெரிது படுத்த வேண்டாம். சூரியா சொந்த வேலையாக இருப்பதால் நானே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எனக்குப் பேசியதும் உடன் சீமானுக்கு பேசச்சொல்கிறேன்” என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
உண்மையைத் தெரிந்து கொள்ள பேட்டி எடுத்த மிரர் நாளிதழின் சம்பந்தப்பட்ட நிருபரை அனுகியிருகிறார்கள் கர்நாடக நாம் தமிழர் இயக்கத்தின் கிளை நிர்வாகிகள். அந்த செய்தியாளர் சூரியா அந்தப் பேட்டியில் பேசியதை தனது டிஜிட்டல் ரெக்கார்டரில் பதிவு செய்திருந்ததால் உடன் அந்தப் பேட்டியின் ஆடியோ ஃபைலின் ஒரு பிரதியையே கொடுத்திருகிறார்.
ஆடியோ பேட்டியைப் கேட்ட சீமான், ஒரு முடிவுக்கு வந்து சூரியாவை தம்பி எனக்குறிப்பிட்டதை வாபஸ் வாங்கிக் கொள்வதோடு, ரத்தசரித்ரம் வெளியாவதை நாம் தமிழர் இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்ற அறிக்கையை எழுதி தயார் செய்து விட்டதாகவும், சூரியாவின் பதிலை பொறுத்து இந்த அறிக்கையை ஊடகத்துகு அனுப்புவது என்றும் முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.
ரத்த சரித்திரம் படத்துக்கு வந்த ஆபத்து விலகிப் போன சூழ்நிலையில், இப்போது சூரியா தானே வாயைகொடுத்து ஆபத்தை விலக்கி வாங்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள் கோடம்பாகத்தில். முன்பு பத்திரிகையாளர்களை தரகுறைவாக பேசிய விவகாரத்திலும் சூரியா பின் விளைவுகளை யோசிக்காமல் பேசியதால் பிரச்சினைகளை சந்தித்தார். தற்போது சூரியாவின் பேச்சு ஈழப் பிரச்சனையில் போதிய பார்வை இன்மையையே கட்டுகிறது என்பது தமிழ் உணர்வாளர்களின் கருத்தாக இருகிறது. நாம் தமிழர் ஆதரித்தாலும் ஃபெப்ஸி ‘ரத்த சரித்திரம்’ படத்தை தென்னிந்தியாவில் அனுமதிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருகிறார்களாம்.
