
தமிழில் பாஸ் என்ற பாஸ்கரன், மலையாளத்தில் எலெக்ட்ரா, கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இடையில் வந்த பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை. குறிப்பாக இந்தி பாடிகார்ட் ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்கவும் தமிழில் ஒரு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவும் நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் மலையாளத்தில்ஹோம்லியாக வந்த வேடங்களில்கூட பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என கேட்டனர். அதனால்தான் மற்ற படங்களை அவர் ஏற¢கவில்லை. மதிலுகள்கப்புறம் படத்தில் விருதுக்கான வேடம் என்பதால் அவர் நடிக்கிறார் என நயனுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
இந்த படம் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மதிலுகள் படத்தின் இரண்டாம் பாகம். இதில் நாராயணி என்ற கேரக்டரில் சிறை கைதியாக நடிக்கிறார் நயன்தாரா. சிறையில் அவர் படும் அவஸ்தைகளை பற்றி சொல்கிறதாம் படம். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசப்பட்டது. அவர் மறுக்கவே, நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஹீரோவாக நடிக்கும் மம்மூட்டியே இப்படத்தை தயாரிக்கிறார். புதியவர் பிரசாத் இயக்குகிறார்.