Sunday, May 20th, 2012

மாயாவுக்கு எதிரான சதியில் இலங்கை அரசு!

Published on August 10, 2010 by   ·   No Comments

உலகின் முன்னணிப் பொப்பிசைப் பாடகர்களில் ஒருவரான புலம்பெயர் ஈழத் தமிழர் மாயா இலங்கை அரசு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவரின் வீடியோக்களை YouTube இல் இருந்து அகற்றி விட வேண்டும் என்று YouTube பாவனையாளர்களுக்கு இலங்கை அரசு கடுமையாக எச்சரித்து வருகின்றது என்றும் அவரின் வீடியோக்களை YouTube இல் இணைப்பவர்கள் பயங்கரவாதத்துக்கு உதவி, ஒத்தாசை வழங்கினர் என்கிற குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுவர் என்று மிரட்டி வருகின்றது என்றும் அருட்பிரகாசம் மாதங்கி என்னும் சொந்தப் பெயர் உடைய மாயா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இலங்கை அரசினால் இந்நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளில் ஒருவராகவே மாயா இலங்கை அரசினால் பார்க்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readers Comments (0)




Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

பிரபலமானவை

பிரபலமான கருத்துக்கள்

Our Sponsors

Our Sponsors